மினிமம் கியாரண்டி கதாநாயகன் சுந்தர்சி-யின் அடுத்த படம் தயாராகிவிட்டது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் சுந்தர் இந்த வாரம் ஐந்தாம் படையோடு களம் இறங்குகிறார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திருமதி சுந்தர். கிரி, ரெண்டு ஆகிய படங்களைத் தயாரித்த நடிகை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சியை வைத்துத் தயாரித்துள்ள படம் ஐந்தாம் படை. இயக்குனர் பத்ரி. மும்பையைச் சேர்ந்த அதிதி சவுத்ரி எனும் புதுமுகம் சுந்தருக்கு நாயகியாக நடிக்கிறார். சிம்ரன், தேவயானி இருவரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஐந்தாம் படை கதை என்ன? ஐந்து சகோதரர்களைச் சுற்றி நடக்கும் கதை என்கிறார்கள். தியேட்டர் உரிமையாளராக சுந்தர்.சி, நடிக்கிறாராம. அதிதி சவுத்ரி அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறார். வில்லன் குடும்பத்துப் பெண்ணாக சிம்ரனும், ஹீரோ குடும்பத்துப் பெண்ணாக தேவயானியும் நடிக்கிறார்களாம். படத்தில் சிம்ரனுக்கு அவரது பழைய பாணியில் ஆட்டம் போடும் டூயட் பாட்டு ஒன்றும் உண்டாம்.
* Do not use semicolon(;)