மணிரத்னம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் வேலு பிரபாகரன். கடவுள், புரட்சிக்காரன் ஆகிய படங்களில் வந்து குட்டி பெரியாராக லெக்சர் கொடுத்தவர்தான் இவர். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு காதல் அரங்கம் என்ற படத்தை எடுத்தவருக்கு சென்சார் சிக்கல். அதையெல்லாம் ஒரு வழியாக சமாளித்துவிட்டு, மீண்டும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் பெரியாரின் கொள்கைகளை இன்னும் அழுத்தமாகச் சொல்லும் விதத்தில் ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறார். ஹீரோ? பாடலாசிரியர் சினேகன்! யோகி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் இவர், ஏற்கனவே மலேசியத் தயாரிப்பாளர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். என்ன காரணத்தினாலோ அப்படம் தள்ளிக்கொண்டே போகிறது. இந்த நேரத்தில் வேலு பிரபாகரனின் அழைப்பு சினேகனுக்கு சந்தோஷத்தை வாரிக் கொடுத்திருக்கிறது.
அதற்குள் இப்படத்தை சினேகனே தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்ப,
ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்கய்யா... என்கிறார் விரக்தியாக!
* Do not use semicolon(;)