ஈழப் பிரச்சனையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் முன்னிலையில் வாக்குக் கொடுத்திருந்தார் அமீர். (இளம்புயல் ஆடியோ விழாவில்தான் இந்த வாக்குறுதி) வாக்குக் கொடுப்பதைப் பாக்குக் கொடுப்பது போல் சாதாரணமாக நினைக்க முடியாதல்லவா? சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதற்கான வேலைகளையும் பார்த்துவருகிறார்.
சேது படத்தில் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே அமீரும் விக்ரமும் நண்பர்கள். சேதுவிற்குப் பிறகு அமீர் படத்தில்தான் நடிப்பதாக இருந்தார் விக்ரம். ஆனால், விக்ரமின் விருப்பம் ரீமேக். அமீரின் விருப்பம் தனது கதை. இந்த முரண்பாடுகளில் இருவருக்கும் இடையே உடையாமல் இருந்தது நட்பு மட்டும்தான். தொழில் விவகாரத்தில் உன் பாதை வேறு. என் பாதை வேறு என்று பிரிந்துவிட்டார்கள்.
பருத்தி வீரன் ஹிட்டுக்குப் பிறகு எப்போ படம் பண்ணலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாராம் விக்ரம். ஈழத் தமிழர்கள் தொடர்பான படத்தை விக்ரம் காம்பினேஷனில் தொடரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் அமீர். ஆனால் விக்ரம் மறுபடியும் ஜெர்க் ஆகிறாராம். இம்முறையும் இந்தத் திட்டம் பணால் ஆகிவிட்டால், வேறென்ன... அமீரே களத்தில் இறங்குவார்!
* Do not use semicolon(;)