லிங்குசாமியின் அடுத்த பட வேலைகள் துரிதமாகத் துவங்கப்பட்டுவிட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து 99 சதவீதம் விடுபட்டுவிட்டாராம் கார்த்தி. இப்படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்த நாள் முதலாகவே துரத்திவந்த நயன்தாரா விவகாரத்திலும் முடிவேற்பட்டு விட்டது. அவரேதான் நடிக்கிறாராம். சம்பளத்தில் கொஞ்சம் இறங்கி வந்திருப்பதாகக் கேள்வி. விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம். சொன்னால், எல்லாரும் இந்தச் சலுகையை எதிர்பார்ப்பார்கள் என்று கேட்டுக்கொண்டாராம் லிங்குசாமியிடம்.
படத்திற்கு பையா என்று பெயர் வைத்திருக்கிறார் லிங்கு. டைட்டிலில் இளமையும் குறும்பும் தாண்டவமாட வேண்டும் என்று மண்டையைக் கசக்கி நூற்றுக்கணக்கான டைட்டில்களை எழுதிக் கடைசியாகப் பையாவைத் தேர்ந்தெடுத்தார்களாம்.
தனது சென்ட்டிமென்ட்படி இப்படத்தையும் கும்பகோணத்தில் துவங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார் லிங்கு!
* Do not use semicolon(;)