இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அர்ஜூன் சம்பத், பெரியார் சிலை உடைப்பு, தாய் மதம் திரும்புதல் முதலிய நிகழ்ச்சிகள் மூலமாகத் தமிழக மக்களிடையே பிரபலமானவர். 2009 மக்களவைத் தேர்தலில், ஜெயலலிதாவிற்கு ஆதரவு தந்து, பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். அர்ஜுன் சம்பத்தை 'வெற்றிப் படிகள்' என்ற வலைப் பதிவை நடத்தி வரும் 'பிரைம் பாய்ன்ட்' சீனிவாசன், 22.4.2009 அன்று தொலைபேசி மூலமாகப் பேட்டி எடுத்தார்.
இந்தப் பேட்டியில், ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று அடித்துச் சொல்லும் அர்ஜுன் சம்பத், அவரது கொள்கைக்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளுடன் எவ்வாறு செயல்படுவார் என்றும் கூறினார். தமிழகத்தில், தேர்தலில் மக்கள் முன் இருக்கும் பிரச்சனைகள், இலங்கை பிரச்சனை, சுவிஸ் வங்கிக் கணக்குகள், தேர்தலுக்கு பின் அமைய இருக்கும் அரசு ஆகியவை பற்றியெல்லாம் பேசினார். அந்தப் பேட்டியின் ஒலி வடிவினை இங்கே கேளுங்கள்.