|
|
 |
|
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வி. சேகர், கட்சி சார்பற்ற உறுப்பினராக நீடிக்க உள்ளார். இவரை 'வெற்றிக் குரல்' என்ற வலைப்பதிவுக்காக 'பிரைம்பாயிண்ட்' சீனிவாசன், தொலைபேசி மூலம் ஆகஸ்டு 4 அன்று பேட்டி கண்டுள்ளார். ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் என்ற அடிப்படையில் தன்னோடு அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டது ஆடித் தள்ளுபடி என்று எஸ். வி. சேகர் கூறியுள்ளார். இடைத்தேர்தலில், அதிமுக எடுத்த 'தேர்தல் புறக்கணிப்பு' முடிவு, தற்கொலைக்குச் சமம்; கோழைத்தனமான முடிவு என்று எஸ். வி. சேகர் விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில், எம்.பி. ஆகக்கூடிய வாய்ப்பு தனக்கு இருப்பதாக அவர் குறிப்பாகக் கூறியுள்ளார். மேலும் பல பரபரப்பான கருத்துகளை வெளிப்படுத்தும் இந்தப் பேட்டியை இங்கே கேளுங்கள். |
|
|
|
Download
Play now
|
|
|
|