Tamil

Tamilசெய்திகள்

மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் நாளை சட்டசபை கூட்டம் முடிவடைகிறது

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் (15-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருகிற 1-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக உயரும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை

Read More
Tamilசெய்திகள்

காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள் – மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- * மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது. * நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.

Read More
Tamilசெய்திகள்

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடு தேவையில்லை என நீதிபதிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்,”அமலாக்கத்துறையின் வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா? மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை” என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், ” லஞ்ச வழக்கில் விசாரணை முடியாமல் பண மோசடி வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும் ? செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் அவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Tamilசினிமா

ஆபாச காட்சிகள் விவகாரம் – ஒடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வாரந்தோறும் திரையரங்குகளில் புதுபுது திரைப்படங்கள் வருவதுப் போல். ஓடிடியிலும் திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. ஓடிடி தற்பொழுது திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் அதனை பன்நாட்டு மக்களுக்கு

Read More
Tamilசெய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம் – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்ரீநகரின் ஜாமியா மசூதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் முதல் முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர்அப்துல்லா கூறியதாவது:- மக்கள் நம்முடன் இருக்கும்போது பயங்கரவாதம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் இது அதன் முடிவுக்கு ஆரம்பம். மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக்கூடாது. துப்பாக்கியால் பயங்கரவாதத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அந்த நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

Read More
Tamilசெய்திகள்

அதிமுக ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப்பொருள் என்ற நிலை இருந்தது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப்பொருள் என்ற நிலை இருந்தது. உயர் பதவியில் இருந்த காவலர்கள் கூட சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலமாக உள்ளது. குட்கா விற்கும் கடைகளை மூடி வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள்! – பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு சமீபத்தில் ஒப்புதல் வாங்கிய நிலையில் தற்போது ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது. தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன. ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.

Read More
Tamilசெய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவ அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி

Read More
Tamilசெய்திகள்

மைசூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பாது – அதிகாரிகள் தகவல்

மைசூரு டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவில் மழையும், பகலில் வெயிலும் அடித்து வருகிறது. கடந்த 19-ந்தேதி இரவு கனமழை பெய்தது.

Read More