'வாத்தியார்'
படத்தை தொடர்ந்து அர்ஜுனை வைத்து 'துரை' என்ற படத்தை
இயக்கி வரும் ஏ வெங்கடேஷ், இப்படத்தைப் பற்றி என்ன
சொல்கிறார்.................பொள்ளாச்சியில் 'மெஸ்'
நடத்தி வருகிறார். 'அம்பி' என்கிற விவேக். அவரது
மெஸ்சில் சர்வராக வேலை செய்த கொண்டிருக்கிறார் ராஜா
என்கிற அர்ஜுன். அப்போது 'துரை' யார் என்ற நீங்கள்
கேட்கலாம்?
அர்ஜுனின் இன்னொரு பெயர்தான் 'துரை' அவர் ராஜா என்ற
பெயரில் சர்வராக வேலை செய்ய காரணம் என்ன? எதற்காக அவர்
பொள்ளாச்சிக்கு வந்துள்ளார் என்பதை பிளாஷ்பேக்கில் படு
அமர்க்களமாக ஆரம்பிக்கிறோம்.
'பவர் பாஸ்ட் கருப்பு' என்கிற ஸ்டண்ட் மாஸ்டர்
இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியை மிகவும்
பிரம்மாண்டமாக எடுக்க உள்ளார். அதற்காக அர்ஜுன் கடந்த
ஒரு மாதமாக கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.
சென்னையில் உள்ள ஒரு முக்கியமான இடத்தில் இந்த ஸ்டண்ட்
காட்சியை படுயதார்த்தமாக எடுக்க உள்ளோம். இப்படத்தில்
இது பெரிய ஹைலைட்டாக பேசப்படும். 'வட்டாரம்' படத்தில்
நடித்த கீரத், இதில் துப்பறியும் பெண் நிருபராக
நடித்துள்ளார். துவானி என்பவர் ஒரு பாடலுக்கு ஆட்டம்
போட்டுள்ளார்.
அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற "ராஜா ராஜாதி
ராஜன். இந்த ராஜா".... பாடலை இமான் ரீமிக்ஸ்
செய்துள்ளார் என்றார் இயக்குநர் ஏ வெங்கடேஷ். |