|
1. ரகுநாதன் (கே கே நகர், சென்னை)
கேள்வி : அரசியல் என்றால் என்ன? தேவையா?
பதில் : சமூகத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு
செல்வதற்கான ஒரு இயல் ஆகத்தான் அரசியல் துவங்கிற்று.
ஆனால் இப்போது அது எப்படி இருக்கிறது என்பதை
சொல்லத்தேவையில்லை.
2. ஹெச் ராமகிருஷ்ணன் (துரைப்பாக்கம், சென்னை)
கேள்வி : அழகு என்பது எது?
பதில் : மகிழ்விக்கக்கூடியது.
3. ரவிச்சந்திரன் (சென்னை)
கேள்வி : தற்போது மனிதருள் மாணிக்கம்
பெயருக்கு உரியவர் யார்?
பதில் : நாளை பிறக்கவிருக்கும் குழந்தை.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|