|
1. விமலா (சென்னை)
கேள்வி : மேல்தட்டு மக்கள் என்றால் யார்?
பதில் : அறிவில் சிறந்தவர்களே உண்மையான
மேல்தட்டு மக்கள். ஆனால் பணத்தில்
சிறந்தவர்களுக்குத்தான் அந்த பெயர் இருக்கிறது.
2. பிரதீபா (நாகர்கோவில்)
கேள்வி : தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கிக்
கிடக்கும் தமிழக பெண்களை வெளியே கொண்டு வருவது எப்படி?
பதில் : இதைவிட பெரிய மாயை ஒன்று
தோன்றும்போது, இதிலிருந்து விடுபடுவார்கள்.
3. வெங்கடேஷ் (வேலூர்)
கேள்வி : ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்த்......
யாருக்கு உங்கள் வாக்கு?
பதில் : வாக்கை பயன்படுத்தாமல் செயலில்
இறங்கியதால்தான் பிரச்சினையே வந்தது.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|