|
1. ராஜமாணிக்கம் (பெங்களூரு)
கேள்வி : கிரிக்கெட்டுக்கும், அரசியலுக்கும்
உள்ள வித்தியாசம்..?
பதில் : கிரிக்கெட்டில், விளையாட்டு வீரரின்
மகனையும், மகளையும் அவ்வளவு எளிதில் களம் இறக்க
முடியாது. அப்படியே செய்தாலும் நின்று ஆடினால்தான்
நிலைத்து நிற்க முடியும். அரசியலில் அப்படியல்ல.....
2. பாலாஜி (சென்னை)
கேள்வி : இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்.....இக்காலத்துக்கு பொருந்துமா..?
பதில் : ஏமாந்த சோணகிரி என்ற பெயர்
வரவேண்டும் என்றால் இந்த குரளை பின்பற்றுங்கள்.
3. ப்ரீத்தி வர்மா (கொல்கத்தா)
கேள்வி : வியாபாரத்தனம் என்பது..?
பதில் : அப்பாவிகளை ஏமாற வைப்பது..,
ஏமாற்றுவது.., இன்னும் அப்பாவிகளை உருவாக்குவது.
இதுதான் வியாபாரத்தனம்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|