|
1. மேரி (சென்னை) கேள்வி:
நடிகை ஜோதிகாவை மீண்டும் திரையில் காணும் வாய்ப்பு...?
பதில்: கடந்த காலத்தில் திருமணமானவுடன் (ஓய்வுபெற்ற)
பல நடிகைகள் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்கள்.
நடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
2. பாக்யா (பாலவாக்கம், சென்னை)
கேள்வி: கணினியும், செல்லுலார் தொலைபேசியும்
இல்லாத ஒரு வாழ்க்கை...?
பதில்: இன்றைய உலகில் அது பிராணவாயு இல்லாத
வாழ்க்கையாகத்தான் இருக்கும். அப்பாடா என்ன நிம்மதி..?
3. செல்வா (நெய்வேலி)
கேள்வி: மலர்களில் கருப்பு நிறத்தில் மலர்
இல்லையே ஏன்? இருந்தால்.. அதிகமாக பேசப்படாதது ஏன்?
பதில்: கருப்பு நிறத்தில் மலர்கள் இல்லாமல்
இல்லை. கருப்பு என்பது வெண்மையைவிட தூய்மையானது. அதை
சக்தி என்கிறோம். ஆனால் இருட்டை பார்த்த கண்கள் அதே
நிறத்தில் மலர்களையும் பார்க்க விரும்புவதில்லை.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |