|
1. ஜெயஸ்ரீ (குரோம்பேட்டை, சென்னை) கேள்வி:
புதிதாக திறக்கப்பட்ட கத்திப்பாரா பாலத்தின் மீது
பயணத்தீர்களா? அனுபவம்..?
பதில்: பலமாதம் அறைக்குள்ளேயே இருந்துவிட்டு,
வெளி உலகுக்கு வந்த இனிமையான அனுபவம்.
2. (மின் அஞ்சலில் வந்த கேள்வி)
கேள்வி: உலகம் வெப்பமடைதல் பற்றி உங்கள்
கருத்து...?
பதில்: சூரியனிலிருந்து வெடித்து சிதறி
உருவான பூமி, காலப்போக்கில் குளிர்ச்சியடைந்து
இப்போதுள்ள நிலைக்கு எட்டியது. இன்னமும் பூமிக்கு உள்ளே
மிகுந்த வெப்பம் கொண்ட திரவம் இருக்கத்தான் செய்கிறது.
அதுதான் அவ்வப்போது வெடித்து எரிமலையாக குமுறுகிறது.
பூமியின் மேல் பரப்பு குளுமையடைந்து வந்ததுபோக தற்போது
வெப்பமடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம்தான்.
மரங்களை வெட்டுவது, காடுகளை அழிப்பது, சுற்றுச்சூழலை
மாசுபடுத்துவது, பிராண வாயுவின் விகிதத்தை குறைப்பது
போன்று தெரிந்தும் தெரியாமலும் பல செயல்களில் மனிதகுலம்
ஈடுபட்டிருப்பதால், வெப்பம் மேலும் அதிகரிக்கத்தான்
வாய்ப்பு இருக்கிறது.
3. முருகவேல் (சென்னை)
கேள்வி: சிம்ரன், குஷ்பு, சுஹாசினி யார்
சின்னத்திரையில் யார் டாப்?
பதில்: லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த
சிம்ரனுக்குத்தான் என்னுடைய ஓட்டு.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |