|
(1)கணபதி (திருவல்லிக்கேணி, சென்னை)
கேள்வி:
ஒகேனக்கல் விவகாரம் - யாருடையது சிறந்த பல்டி..?
கருணாநிதி அல்லது மொய்லி..?
பதில்: பெங்களூரில்
உண்மை பேசி மாட்டிக் கொண்ட மொய்லியை தில்லியில்
பல்டியடிக்க வைத்தவரே கருணாநிதிதானே..!
(2)ரூபா (சென்னை-83)
கேள்வி: இந்த ஆண்டு இனி
புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இனிய தமிழ்
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். இது எப்படி
இருக்கு?
பதில்: இந்த ஆண்டு
பொங்கலுக்கு பிறகுதான் அரசாணை வெளிவந்தது. ஆக இந்த
ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு
தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அடுத்த
ஜனவரிக்குள், இனிமேல் தீபாவளியும் பொங்கல் அன்றே வரும்
என்று அரசாணை வந்துவிட்டால்...... எல்லாவற்றுக்கும்
சேர்த்து ஒரே வாழ்த்து.
(3) ஜி கே (சென்னை - 5)
ேள்வி: காவிரி பிரச்சினையில்
ரஜினியின் ரோல் என்ன..?
பதில்: வழக்கம்போல டபுள்ரோல்.
இரட்டைவேடம்தானே.!
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |