|
(1)சுப்பிரமணியம் (சென்னை) கேள்வி:
திருப்பதி கோயிலில் நடிகை ஸ்ரேயா நடந்துகொண்ட விதத்தை
பற்றி..?
பதில்: சீனாவில் லாவோட் ஸு என்ற
சிந்தனையாளர் நீதிபதியாகவும் இருந்தார். ஒரு கடையில்
பொருள்கள் களவு போயிற்று. திருடனைப் பிடித்தார்கள்.
திருடியவனுக்கு 50 ரூபாயும், கடைக்காரனுக்கு 100
ரூபாயும் அபராதம் விதித்தார். அதேபோல ஒரு இளம்பெண்
கற்பழிக்கப்பட்டாள். கற்பழித்தவனுக்கு 100 ரூபாயும்,
அந்த இளம்பெண்ணுக்கு 200 ரூபாயும் அபராதம் விதித்தார்.
கடைக்காரரும் சரி, அந்த இளம்பெண்ணும் சரி,
கவர்ச்சியால் மற்றவர்களை இழுக்கும் குற்றம்
புரிந்தமைக்காக இந்த அபராதம்.
(2)தினேஷ் (சென்னை)
கேள்வி: சோனியா காந்தி சொல்லித்தான்
கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை கிடப்பில் போட்டதாகவும்,
சோனியாவுக்கு கர்நாடகத்தின் மீது உள்ள அன்பையே இது
எடுத்துக்காட்டுவதாகவும் வீரப்பமொய்லி கூறியுள்ளாரே..?
பதில்: இந்த உண்மையை மறைக்க கருணாநிதி
எவ்வளவோ முயன்றும்கூட வீரப்ப மொய்லி போட்டு
உடைத்துவிட்டார். ஒருநாள் உண்மை வெளிவந்தேத் தீரும்
என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
(3) ரகுநாதன் (சென்னை)
ேள்வி: மாநகராட்சி மருத்துவமனையில்
தாயும்-சேயும் மரணம் குறித்து?
பதில்: மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்று
பிழைத்து உயிரோடு வெளியே வருவதுதான் ஆச்சர்யம்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |