|
(1)ஜெயஸ்ரீ (மறைமலைநகர்) கேள்வி:
கர்நாடகாவில் புதிய அரசு அமைந்தவுடன் ஒகேனக்கல்
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா..?!
(ஆந்திரா, கர்நாடகா, கேரளா மூன்றிலுமே திமுக கூட்டணி
கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது, இருந்தும்.....
பெரியாறு, பாலாறு, காவிரி தீர்ந்தபாடில்லை)
பதில்: ஒகேனக்கல்லை குழிதோண்டி
புதைத்தாகிவிட்டது. இனிமேல் அதை எடுக்க முடியாது.
(2)பிரியா (சோழிங்கநல்லூர், சென்னை)
கேள்வி: நரிக்கும், குள்ளநரிக்கும்
வித்தியாசம்.?
பதில்: மலைக்கும், எரிமலைக்கும் உள்ள
வித்தியாசம்.
(3)ராணி (வேலூர்)
கேள்வி: மறைந்த நடிகர் ரகுவரன்.....?
பதில்: வித்தியாசமாக நடித்தால்தான்
திரைப்படங்களில் நல்ல பெயர் எடுக்க முடியும் என்பதை
உணர்ந்த புத்திசாலி. அவரது நினைவுக்கு சென்னை ஆன்லைன்
அஞ்சலி செலுத்துகிறது.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |